|
|
|
Gounder
- வள்ளல் கவுண்டர் வம்சாவளி
|
|
|
|
|
|
|
வள்ளல் கவுண்டர் வம்சாவளி
வள்ளல் கவுண்டன் யெண்ணப்பட்ட பூற்வத்து பாளையகாரனுடைய, வம்சாவளி முதலான கைபீயிது, புக்கு…. தாறாபுரம் துக்கடி அறவகுறுச்சி தாலூகா கசுபாவுக்கு சேற்ந்த மஞ்சறா பூமிதெலத்துலே யிறுக்கும், வள்ளல்க் கவுண்டன் யெண்ணப்பட்ட தலைய நாட்டுப் பட்டக்காரனுடைய வம்சாவளி முதலான கைபீயிது யென்னவென்றால்:- பூற்வத்தில் குறுகுல வம்சமான செத்திரிய சாதியில் ஸ்ரீகாள ஹஸ்திபுரத்தில் வாசமாயிறுக்கப்பட்ட உடுப்பூறில் நாகறாசாயென்ங்குறவற் குமாரற் திண்ணநாற் யெங்குறவன் தேவாம்சைய குணாதிசயம்கள் நாலே வனத்தில் வேட்டைக்கு போஇ பட்சிகள் மிறுகங்களைக் கொண்டு வந்து, ஈசுவறனுக்கு அதிபகுக்தி, ஓடேன தன்னுடைய ஆசாரத்துடனே மாமிசங்கள் நாலே பூசை பண்ணிக் கொண்டு வந்தான். தின பிறதியாஇ ஆரு நாள் பூசை பண்ணினதில் ஆறானாள் பூசை பண்ணுகுரதுக்கு வந்த சமயத்தில் ஈசுவறனுக்கு தின காலத்தில் பூசை பண்ணப்பட்ட சிவகோசறி யெண்ணப்பட்ட பிராமணற்மாம்சம் பூசை பண்ணி கொண்டு அனாசாரம் பண்ணுகுரவனை பிடிக்க வேணும்படியாக யோசிச்சு யிறுந்து சுவாமி அவனுடைய சொப்பனத்தில் அந்த அனாசாரம் செயிதவனுடைய பகுத்தியைக் காண்பிச்சு குடுக்குரோமே(ன்)றும் னீ வனத்தில் ஒளிஞ்சியிறு யென்று சொன்னாற். அப்போ அந்த காரணாற்த்தத்துக்கு ஆக ஈசுவறன் தம்முடய நேத்திரங்களிலே ஒறு நேத்திரம் ஒளிகும் படியாஇ காண்பித்தாற். அதை பாத்து மாம்ச பூசை பண்ணப்பட்ட திண்ணநாற் யெங்குறவன் சுவாமிக்கு கண்ணு போஇ விட்டது யெண்ணும்படியா யெண்ணி தன்னுடைய கண்ணை ஒண்ணு ஆயுதத்துநாலே யெடுத்து, சுவாமிக்கு வைச்சான். மறுபடி ஈசுவறன் நேத்திரம் ஒளுகும்படியாக பண்ணிநாற். மறுபடி திண்ணனாற் யெங்குறவன் தன்னுடைய ரெண்டான் கண்ணைப் பிடிங்கி வைக்க வேணும்படியாக யெண்ணி, சுவாமினுடைய நேத்திரத்தை தன் காலுனாலே மிதிச்சுக் கொண்டு தன் கண்ணை பிடிங்கி வெச்சான். அந்த சமயத்தில் சுவாமி யிவனுடைய பகுத்திக்கு மிகவும்சந்தோஷப்பட்டு விறுஷப வாகனாறுடறாயி பிறதிட்சணமாஇ னீ யென்னுடைய பகுத்தன் யென்று சொல்லி கைலாசத்துக்கு வறவளைச்சு கொண்டாற். மேல் யெளுதப்பட்ட திண்ணநாற் யெங்குறவன் மாம்ச பூசை பண்ணி முகுத்தி பெற்று வேட குலனென்றும் கண்ணப்ப னென்றும் பேறாச்சுது. அந்த வம்சத்தில் உள்ள வம்ச பரம்பரைக்கு வேட்டுவ சாதியென்று பேற் வுண்டாச்சுது.
வேடகுல சாதியில் காள அஸ்தி பிறதேசங்களுக்கு றாசாவா இறுக்கப்பட்ட வம்ச பறம்பரையிலே முத்துறாசாக்கள் கூட்டமென்று பேற் பிறசுத்திப்பட்டு யிறுக்கும் நாளையில்…. அக்காலத்தில் கொங்கு தேசமான சேறன் றாச்சியத்தில் சிவ பிறாமணாள்,செட்டியள் காணியாட்சிக்காறறாயி இறுக்கும் நாளையில் அக்காலத்தில் றாச்சியாதிபதிகளான சோளசேற பாண்டிய மூணு றாசாக்களிடத்திலேயும் வல்லுவக்கானும் அச்சுத களப்பாளன் ஒட்டியன் யிந்த மூன்று பேறும் யிந்த றாச்சியங்களிலே அங்காமி பண்ணிக் கொண்டு யிறுக்கும் நாளையில் சிவபிறாமண செட்டிகள், அங்காமிக்கு பொறுக்க மாட்டாமல், பாண்டிய றாசா அவற்கள் யிடத்தில் போஇ சொல்லி கொண்டாற்கள் அப்போ அந்த மூன்று பேரையும் பிடிக்குரதுக்கு அகப்படாமல் போனபடியநாலே அந்தத் திறுடனெ பிடிக்கத் தக்க மனுஷாளை யேற்ப்படுத்திக் கொண்டு வந்தால் அவாளுக்கு ஆதீனம் உண்டு பண்ணி குடுக்குரோமென்று பாண்டிய றாசா வுத்திர பண்ணிநாற். காளஅஸ்தி பிறதேசத்துலே யிறுக்கப்பட்ட முத்து றாசாக்கள் கூட்டத்தில் சிவபிறாமணாள் செட்டியள் போஇ யிந்த அங்காமி சேதிகள் யெல்லாம் சொல்லிக் கொண்டு பாண்டிய றாசா வுத்திரவு செயித சேதி அறிய பண்ணினார்கள். அப்போ புன்னாடி கோத்திரத்தில் தன்ண்டெறி முத்துறாசா யெங்குற பேறுண்டானவன் சிறுது சனத்துடனே பிறக்கப்பட்டு சிவ பிறாமண செட்டியளையும் கூட்டிக் கொண்டு பாண்டிய றாசாயிடத்து வந்து அந்த சில்லரை பண்ணிண மூன்று பேரையும் பிடிச்சி குடுக்குரோமென்று சொல்லிக் கொண்டு பாண்டிய றாசாயிடத்தில் பாக்கு வெத்தலை வாங்கிக் கொண்டு ஒட்டியன் யெண்ணப்பட்டவனையும், அவனைச் சேற்ந்த சனங்களையும் வெட்டி செயித்து செயம் கொண்டு வந்தபடிநாலே பாண்டிய றாசா மிகவும் சந்தோஷப்பட்டு, வேட்டுவ றாசாக்களென்று பேறும் குடுத்து யிந்த நாட்டில் பாடி பனிரெண்டு மூன்றி முப்பத்தி ஆறுக்கு மேலான காணியாஷ்சியும் உண்டு பண்ணி குடுத்து அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியான சவுந்திர பாண்டிய றாசா அவற்கள் ரொம்பவும் தயவுநாலே தம்முடைய பேறான சவுந்திர பாண்டிய தண்டேறி முத்துறாசா யென்ங்குற பெரையும் குடுத்து முன் முத்து றாசாவுக்கு வுண்டான வசவசெங்கறடால், புலிக்கொடி, வெள்ளைக்கொடை முதலான விறுதுகள் அல்லாமல் பல்லக்கு,சாமதுரோக ஹரவெண்டயம்,குதிரை மேல் டக்கா, ஒட்டகை மேல் நகாறு, ஆனைமேல் நலபத்து, யெறுத்து மேல் தம்மட்டம், சங்கீத மேளம், பூறிகை, காஹள பேறி சின்னம், பக்கா-யிது முதலான பிறுதுகளும் குடுத்து மணலூறுக்கு சேந்தபாடி பனிரெண்டு முப்பத்தி ஆறு கிறாமங்கள், உள்ப்பட்டட சீமைகழு பட்டாதி காறியாஇ பட்டாபிஷேகம் பண்ணிவிச்சு குடுத்தாற்கள்.
|
|
|
|
|
|
|